படம் | AP
கிரிக்கெட்

2-வது டி20: இந்தியா பந்துவீச்சு; அணியில் இரு மாற்றங்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜனவரி 25) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்கிறது.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காயம் காரணமாக நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியிலும் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜேக்கோப் பெத்தேலுக்குப் பதிலாக அறிமுக வீரர் ஜேமி ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சனுக்குப் பதிலாக பிரைடான் கார்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

மின்சார உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூடல்:ஊழியர்கள் டவர் மீது ஏறிப் போராட்டம்!

SCROLL FOR NEXT