முகப்பு
கிரிக்கெட்

4-வது டி20: இந்தியா பேட்டிங்; ஷிவம் துபே அணியில் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2025 at 1:13 PM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்று (ஜனவரி 31) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் விளையாடாத அர்ஷ்தீப் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ரிங்கு சிங்கும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மார்க் வுட்டுக்குப் பதிலாக சாக்யூப் மஹ்முத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேமி ஸ்மித்துக்குப் பதிலாக ஜேக்கோப் பெத்தேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருப்பதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமலிருக்கும் முனைப்பில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி களம் காண்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →