முகப்பு
கிரிக்கெட்

12 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய கோலி! 6 ரன்களில் அவுட்!

ரஞ்சி கோப்பையில் தில்லி - ரயில்வேஸ் அணி ஸ்கோர் விவரம்...

Updated On : 31 ஜனவரி 2025, 11:34 am IST
விராட் கோலி - PTI
பகிர்:

ரஞ்சி கோப்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தில்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி வெறும் 6 ரன்களில் அவுட்டானார்.

ரஞ்சி டிராபிக்கான தில்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் விளையாடும் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் திடலில் நடைபெற்றுவருகிறது.

சர்வதேசப் போட்டிகளில் சரியாக விளையாடாத இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்டனர். மேலும், இந்திய வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது கட்டாயமாக்கி பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இதனால், ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களும் அவரவர் மாநில அணிகளுக்காக விளையாடினர். முதல் சுற்றில் விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விளையாடவில்லை.

இந்த நிலையில், ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணிக்காக விராட் கோலி வியாழக்கிழமை களமிறங்கினார்.

ரயில்வேஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தில்லி அணி 97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளூர் சிவப்புப் பந்து போட்டிகளில் களமிறங்குவதால் விராட் கோலி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 15 பந்துகளில் 6 ரன்களுக்கு ஹிமான்ஷு சங்வான் பந்தில் போல்டானார்.

இதனால் மைதானத்தில் குவிந்திருந்த கோலியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments