பிரைடன் கார்ஸ் பந்துவீச, கே.எல்.ராகுல் உன்னிப்பாக பார்க்கும் காட்சி...  படம்: ஏபி
கிரிக்கெட்

இந்தியாவுக்கு 135 ரன்கள், இங்கிலாந்துக்கு 6 விக்கெட்டுகள் தேவை: கடைசி நாளில் யார் வெல்லுவார்கள்?

இந்தியா - இங்கிலாந்து உடனான 3-ஆவது டெஸ்ட்டின் கடைசி நாள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட்டின் கடைசி நாளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இங்கிலாந்து, லண்டனில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளுமே 367 ரன்கள் எடுத்தது.

இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 4-ஆம் நாள் முடிவில் 58 ரன்களுக்கு 4 ரன்களை இழந்தது.

இந்திய அணி வெற்றிபெற 135 ரன்களும் இங்கிலாந்து வெற்றிபெற 6 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.

இந்தப் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றிபெற 135 ரன்களும் இங்கிலாந்து வெற்றிபெற 6 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.

இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரில் 2-1 என முன்னிலைப் பெறும். அதனால், இந்தப் போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இரு அணி வீரர்களும் அடிக்கடி வாக்குவாதம், மோதலில் ஈடுப்பட்டு வருவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தப் போட்டி சுவாரசியமாக இருக்கிறது.

இந்திய அணியில் கே.எல்.ராகுல் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

Expectations are high on who will win on the final day of India's third Test against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT