துருவ் ஜுரெல்  படம்: பிசிசிஐ
கிரிக்கெட்

வெளிநாட்டில் சவாலை முறியடிப்பது சிறப்பான விஷயம்: துருவ் ஜுரெல்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடர் பற்றி துருவ் ஜுரெல் பேசியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

வெளிநாடுகளில் விளையாடுவது எப்போதும் சவலான என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டருமான துருவ் ஜுரெல் கூறியுள்ளார்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31) மதியம் தொடங்குகிறது. இதில் வென்றால் இந்திய அணி தொடரை 2-2 என சமன்செய்ய முடியும்.

ரிஷப் பந்த் காயம் காரணமாக வெளியேறியதால் துருவ் கீப்பராக செயல்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வெளிநாடுகளில் விளையாடும்போது சவால்களை கடப்பது எப்போதும் சிறப்பான விஷயமாகும்.

வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும்போது மக்கள் நம்மை பெரிதாக மதிப்பிடுவார்கள். அதனால், நான் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறேன்.

களத்துக்குச் சென்று என்னை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய யோசனையாக இருக்கிறது.

இந்தப் போட்டி முக்கியமானது. அதனால், என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

துருவ் ஹுரெல் 4 டெஸ்ட் போட்டிகளில் 202 ரன்கள் எடுத்துள்ளார். தமிழக வீரர் என்.ஜெகதீசன் மாற்றுவீரராக அணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Wicketkeeper batter Dhruv Jurel understands that performing in overseas conditions will push the stocks of a player up and is excited to turn out for India in the fifth Test against England in place of injured vice-captain Rishabh Pant.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT