மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பிரிஸ்டாலில் இன்று (ஜூன் 8) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்கிறது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் அந்த அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.