டேவிட் பெடிங்ஹாம் படம்: ஏபி
கிரிக்கெட்

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் ஆட்டம் குறித்து...

DIN

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது.

லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடிவில் தெ.ஆ. 43/4 ரன்கள் எடுத்திருந்தது.

2ஆம் நாளில் சிறப்பாக தொடங்கிய தெ.ஆ. அணியின் கேப்டன் டெம்பா பவுமா ஸ்டார் வீசிய ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.

கடைசியாக பவுமா 36 ரன்களுக்கு பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டேவிட் பெடிங்ஹாம் 95 பந்துகளில் 39 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது, உணவு இடைவேளை வரை தெ.ஆ. 121க்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

களத்தில் பெடிங்ஹாம் உடன் கைல் வெர்ரெய்ன் 11 ரன்களுடன் இருக்கிறார். 91 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ள தெ.ஆ.வுக்கு இன்றைய நாள் மிகவும் முக்கியமானது.

பெடிங்ஹாம் இங்கிலாந்தில் 58 முதல் தர போட்டிகளில் 4,463 ரன்கள் குவித்துள்ளார். இந்த அனுபவத்தை வைத்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT