FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

லயனிடம் ஆட்டமிழக்காத ஒரே வீரர் மார்க்ரம்..! ஐசிசி கோப்பையை வாங்கித்தரும் நாயகன்!

தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் அசத்தல் பேட்டிங் குறித்து...

Updated On : 14 ஜூன் 2025, 1:14 pm IST
சதமடித்த மகிழ்ச்சியில் எய்டன் மார்க்ரம். - படம்: ஏபி
பகிர்:

தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் டெஸ்ட்டில் நாதன் லயனிடம் ஆட்டமிழக்காத ஒரே வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் ஜூன்.11 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழக்க, தெ.ஆ. 138க்கு ஆட்டமிழந்தது.

Advertisement

Advertisement

இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. 207க்கு ஆட்டமிழந்தது. 282 ரன்கள் தேவை என்ற நிலையில் தெ.ஆ. 3ஆம் நாள் முடிவில் 213/2 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த 2ஆவது இன்னிங்ஸில் கேப்டன் பவுமா கால் வலியிலும் 65 ரன்களுடன் சிறப்பாக ஆடி வருகிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு ஐசிசி கோப்பையை வாங்கித்தரும் நோக்கில் எய்டன் மார்க்ரம் சதமடித்து நாயகனாக மாறியுள்ளார்.

ஆஸி. பந்துவீச்சில் தடுமாறாமல் விளையாடுகிறார். குறிப்பாக, நாதன் லயனுக்கு எதிராக 200 பந்துகள் விளையாடிய 50 பேட்டர்களில் ஆட்டமிழக்காத ஒரே வீராரக எய்டன் மார்க்ரம் மாறியுள்ளார்.

159 பந்துகளில் 102 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். ஆட்ட நாயகன் விருதையும் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments