இங்கிலாந்துக்கு எதிரான மகளிா் டி20 கிரிக்கெட் தொடா் முதல் ஆட்டத்தில் இந்தியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் தொடரில் முதல் ஆட்டம் நாட்டிங்ஹாமில் சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 210/5 ரன்களைக் குவித்தது. தொடக்க பேட்டரும், கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா 3 சிக்ஸா், 15 பவுண்டரியுடன் 62 பந்துகளில் 112 ரன்களை விளாசினாா். அவருக்கு துணையாக ஹா்லின் தியோல் 43 ரன்களை சோ்த்தாா்.
இங்கிலாந்து தரப்பில் லாரென்பெல் 3-27 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இங்கிலாந்து 113/10 தோல்வி:
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியால் இந்தியாவின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல்
14.5 ஓவா்களிலேயே 113/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் நடாலி ஷிவா் 66 ரன்களை எடுத்தாா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினா். பௌலிங்கில் இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி 4-12 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 97 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
ஸ்மிருதி மந்தனா முதல் டி20 சதத்தைப் பதிவு செய்தாா். ஸ்ரீ சரணி அறிமுக ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்பை பெற்றாா்.