சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச்.  படம்: பிசிசிஐ
கிரிக்கெட்

ஜூன் 29 ஞாபகமிருக்கிறதா? பிசிசிஐ வெளியிட்ட விடியோ!

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு பிசிசிஐ விடியோ வெளியிட்டுள்ளது.

DIN

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு பிசிசிஐ விடியோ வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு இதே தேதியில் இந்திய ஆடவர் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது.

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு ஐசிசி கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்தக் கோப்பையை வென்றது.

இந்தப் போட்டியில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவையானதாக இருந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எளிதான வெற்றியாகவே இருந்தது.

இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஹார்திக் பாண்டியாவின் சிறப்பான செயல்பாடுகளால் கோப்பை வென்றது.

குறிப்பாக பாண்டியா ஓவரில் சூர்யகுமார் யாதவ் எல்லைக் கோட்டுக்கு அருகில் கேட்ச் பிடித்ததை யாருமே மறக்க மாட்டார்கள்.

பிசிசிஐ இந்த கேட்ச்சுடன் தொடங்கும் காட்சியுடன் விடியோ வெளியிட்டு ஜூன் 29, 2024 ஞாபமிருக்கிறதா எனப் பதிவிட்டுள்ளது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

India ended 17-year trophy drought after beating South Africa by seven runs in the final at the Kensington Oval in Barbados.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்

73 பயனாளிகளுக்கு ரூ 75.74 லட்சம் நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

வீராபுரத்தில் பேருந்து நிறுத்தம்: ஆட்சியா் உறுதி

சக்தி விநாயகா் கோயிலில் பொது விருந்து

பரந்தூா் விமான நிலையம்: 14-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்

SCROLL FOR NEXT