FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இறுதிப் போட்டிக்கு தேர்வான மே.இ.தீ. அணி..! இந்தியாவுடன் நாளை பலப்பரீட்சை!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் மே.இ.தீ. அணி இலங்கையை வீழ்த்தியது.

Updated On : 15 மார்ச் 2025, 11:45 am IST
மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி. - படம்: எக்ஸ் / ஐஎம்எல்டி20.
பகிர்:

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் மே.இ.தீ. அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் விளையாடியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

Advertisement

Advertisement

அடுத்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 173/9 ரன்கள் எடுத்தது.

மேற்ந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியின் டினோ பெஸ்ட் 4 விக்கெட்டிகள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மே.இ.தீ. அணி மோதவிருக்கிறது.

இந்தப் போட்டி நாளை (மார்ச்.16) இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

இந்திய அணிக்கு சச்சினும் மே.இ. தீ. அணிக்கு லாராவும் கேப்டனாக இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments