PTI
கிரிக்கெட்

சீரான இடைவெளியில் சரிந்த விக்கெட்டுகள்: பரபரப்பான கட்டத்தில் இறுதி ஆட்டம்!

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்களில் பெவிலியனுக்கு திரும்பினார்...

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: மகளிர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா சீரான இடைவெளியில் சரிந்த விக்கெட்டுகளைப் பறிகொடுத்து விளையாடி வருகிறது; ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் நகருகிறது!

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வெல்லும் முனைப்பில் இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் ஆக்ரோஷமாக விளையாடி வருகின்றன. நவி மும்பையில் டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் தொடங்கியுள்ள இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா பேட்டிங்கில் ஈடுபட்டுள்ளது.

அதில், தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 5-ஆவது அரைசதமாகும். ஸ்மிரிதி மந்தனா 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 104 ரன்களைச் சேர்த்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

ஷஃபாலி வர்மா 87 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அரையிறுதியில் கிரிக்கெட் உலகத்தையே திரும்பிக் பார்க்கச் செய்த ஆட்டநாயகி ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்களில் பெவிலியனுக்கு திரும்பியதும் அரங்கத்தில் மயான அமைதி நிலவியது.

இந்த நிலையில், இந்தியா 45 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களைத் திரட்டியுள்ளது. களத்தில் தீப்தி ஷர்மாவும் ரிச்சா கோஷும் உள்ளனர்.

ICC Women's World Cup final ODI cricket match between India Women and South Africa Women

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT