டி20 உலகக் கோப்பை! டாப் - 5 பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் யார்யார்?
டி20 உலகக் கோப்பையின் டாப் - 5 பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் பற்றி...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் - 5 பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் பற்றி!
இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த தொடரில் இந்திய அணிக்காக நாக் - அவுட் போட்டிகளில் களமிறங்கி தொடர்ந்து அரைசதங்கள் விளாசி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்த சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார்.
சஞ்சு சாம்சன் 5 போட்டிகளில் விளையாடி 321 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 97 ரன்கள் விளாசினார்.
டாப் - 5 பேட்டர்கள்
சாஹுப்சாதா ஃபர்ஹான் (பாகிஸ்தான்) - 383 ரன்கள்
டிம் செய்ஃபெர்ட் (தென்னாப்பிரிக்கா) - 326 ரன்கள்
சஞ்சு சாம்சன் (இந்தியா) - 321 ரன்கள்
இஷான் கிஷன் (இந்தியா) - 317 ரன்கள்
பின் ஆலன் (நியூசிலாந்து) - 298 ரன்கள்
ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கனடா இளம் வீரர் யுவராஜ் சர்மா (110) முதலிடத்தில் உள்ளார்.
டாப் - 5 பந்துவீச்சாளர்கள்
ஜஸ்ப்ரீத் பும்ரா (இந்தியா) - 14 விக்கெட்டுகள்
வருண் சக்கரவர்த்தி (இந்தியா) - 14 விக்கெட்டுகள்
ஷாட்லி வான் ஷால்க்விக் (அமெரிக்கா) - 13 விக்கெட்டுகள்
பிளெஸ்ஸிங் முஜரபானி (ஜிம்பாப்வே) - 13 விக்கெட்டுகள்
ஆதில் ரஷித் (இங்கிலாந்து) - 13 விக்கெட்டுகள்
ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர் என்ற புள்ளிப் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ரொமாரியா ஷெப்பர்ட் (5/20) முதலிடத்தில் உள்ளார்.
T20 World Cup! Who are the top 5 batsmen and bowlers?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.