கடைசி டி20: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் சஞ்சு சாம்சன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 11) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக சூர்யான்ஷ் ஷெட்ஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
முதல் டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன், கடந்த மூன்று போட்டிகளாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
India won the toss and elected to bowl in the final T20 match against England.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.