கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சு பயிற்சியாளராக டிம் சௌதி நியமனம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 16 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாயில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
மினி ஏலத்துக்கு முன்பாக அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும், வர்த்தக (டிரேடிங்) முறையில் ஈடுபட்டு வீரர்களை வாங்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
Advertisement
Advertisement
கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் விலகிய நிலையில், புதிய தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உதவிப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நியமிக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நிகழாண்டின் (2025) துவக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற டிம் சௌதி, தற்போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் உள்ளார்.
36 வயதான டிம் சௌதி 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் கொல்கத்தா அணியில் விளையாடியுள்ளார்.
அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளையும் சேர்த்து 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள சௌதி, 2019 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும் இரண்டாம் பிடித்ததிலும், 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலும் விளையாடி வெற்றி பெற்றதில் பெரும் பங்காற்றியுள்ளார்.
NZ legend Tim Southee appointed KKR's bowling coach ahead of 2026 season
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.