வெற்றிக் களிப்பில் இந்திய மகளிரணி.  படம்: எக்ஸ் / பிளைண்ட் _கிரிக்கெட்
கிரிக்கெட்

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா!

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.

முதல்முறையாக நடைபெறும் இந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்துள்ளது.

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் புது தில்லி, பெங்களூரு மற்றும் இலங்கையில் நடைபெற்றன.

இந்தத் தொடரின் அரையிறுதியில் ஆஸி.யை வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டியில் நேபாளத்தை சந்தித்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவர்களில் 114/5 ரன்கள் எடுத்தது.

நேபாளம் அணியில் அதிகபட்சமாக சரிதா கிம்ரே 35 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அனுகுமாரி, ஜமுனா ராணி தலா 1 விக்கெட் எடுத்தார்கள்.

இத்துடன் 3 ரன் அவுட்டுகளை செய்து இந்திய மகளிரணி அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய இந்திய அணி 12.1 ஓவர்களில் 117/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவின் பியூலா சரண் அதிகபட்சமாக 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

India on Sunday won the inaugural T20 blind women's world cup after defeating Nepal by seven wickets in the final played at the P Sara oval here.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிக்கி கல்(யாண) ராணி!

உடைந்து அழுத சான்ட்ரா... பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

ஜிலேபியா, டோனட்டா, எது மிகவும் மோசம் தெரியுமா?

மீண்டும் பிரசாரத்தைத் தொடங்கும் இபிஎஸ்: நவ.30-ல் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

திடீரென கால், முகத்தில் வீக்கமா?சிறுநீரகக் கோளாறாக இருக்கலாம்! மருத்துவர் ஆலோசனைகள்!

SCROLL FOR NEXT