வெற்றிக் களிப்பில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித்.  படம்: ஏபி
கிரிக்கெட்

தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் களமிறங்கியது ஏன்? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

ஆட்டத்தை மாற்றிய முடிவு குறித்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் களமிறங்கியது ஏன் என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புன்னகையுடன் பதில் அளித்துள்ளார்.

இங்கிலாந்து அணி உள்பட யாருமே எதிர்பார்க்காத இந்த யுக்தியினால் ஆஸி. அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

வழக்கமாக மிடில் ஆர்டராக களமிறங்கும் டிராவிஸ் ஹெட் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரராக களமிறங்கினார்.

அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 83 பந்துகளில் 123 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கவாஜாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் யாருமே எதிர்பார்க்காத டிராவிஸ் ஹெட் களமிறங்கி ஆட்டத்தையே மாற்றினார்.

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசியதாவது:

இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளையில் யாரை தொடக்க வீரராக களமிறக்கலாம் என நாங்கள் பேசிவந்தோம்.

அப்போது வந்த டிராவிஸ் ஹெட் வேண்டுமென்றே, ‘நான் இறங்குகிறேன். நான் கண்டிப்பாக இறங்குவேன்’ எனக் கூறினார்.

நானும் போய் விளையாடு என்றேன். முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுஷேன் தொடக்க வீரராகவும் நான் மூன்றாவதும் இறங்கியது எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை.

டிராவிஸ் ஹெட் ஆஷஸில் தலைசிறந்த ஓர் ஆட்டத்தை ஆடிவிட்டார்.

நாங்கள் நாதன் லயனை களமிறக்கவும் சிந்தித்து வந்தோம் என புன்னகையுடன் ஸ்டீவ் ஸ்மித் பேசினார்.

Captain Steve Smith responded with a smile when asked by reporters why Travis Head was fielded as the opener.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT