துபை டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்..! அதிகபட்ச தொகைதான் காரணமா?
துபை டி20 ஏலத்தில் விலைபோகாமல் சென்ற அஸ்வின் குறித்து...
துபை டி20 ஏலத்தில் ரவிசந்திரன் அஸ்வினை (39 வயது) எந்த அணியும் தேர்வு செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் சமீபத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஆர்.அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Advertisement
Advertisement
இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த டிசம்பரில் ஓய்வை அறிவித்தார்.
துபையில் நடைபெறும் ஐஎல்டி20 தொடரில் அடிப்படை விலை 1,20,000 அமெரிக்க டாலரில் அஸ்வின் ஏலத்தில் பங்கேற்றார்.
ஆறு இலக்க எண்ணில் ஏலத்தில் பங்கேற்ற ஒரே வீரரான இவரை எந்த அணியும் தேர்வு செய்யாமல்விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் வைல்ட் கார்டு வகையில் ஏதேனும் ஒரு அணி ஏலத்தில் எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஏற்கெனவே, அஸ்வின் பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமில்லாமல் ஹாங்காங் சிக்ஸஸ் அணிக்காக இந்திய அணியிலும் அஸ்வின் விளையாடுக்கிறார்.
சிஎஸ்கேவில் தொடங்கிய தனது ஐபிஎல் பயணத்தை அதே அணியில் முடித்து வைத்தார். கடைசி சீசனில் சுமாரான செயல்பாடுகளை வழங்கிய அஸ்வினை மினி ஏலத்தில் விற்க இருந்ததாக சில தகவல்கள் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
Former India spinner Ravichandran Ashwin went unsold at the ILT20 auction.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.