லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்திய வீரர்கள்!
லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக அந்த தொடரின் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக அந்த தொடரின் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடத்தப்படும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 6-வது சீசன் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 5 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தமாக 24 போட்டிகள் நடத்தப்படும். 20 லீக் போட்டிகளும், 4 நாக் அவுட் சுற்றுப் போட்டிகளும் இதில் அடங்கும். இலங்கையில் உள்ள மூன்று திடல்களில் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படும்.
இந்த நிலையில், லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக அந்த தொடரின் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல் முறையாக லங்கா பிரிமீயர் லீக் தொடரில் இந்திய வீரர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த வீரர்கள் இணைய உள்ளார்கள் என்பது குறித்த தகவலை விரைவில் வெளியிடுவோம். லங்கா பிரிமீயர் லீக் தொடரில் இந்திய வீரர்கள் இணையவுள்ளனர் எனத் தெரிந்ததும் இலங்கையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களுடன் இணைந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The organizers of the Lanka Premier League have announced that Indian players will be participating in the tournament for the first time.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.