பாகிஸ்தானை வென்ற இந்திய மகளிர் அணி! ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது! -பாஜக
இந்திய மகளிர் அணி வெற்றி குறித்து பாஜக பதிவு...
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக பாரதிய ஜனதா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை மோதின. இந்தப் போட்டியில், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் மூன்று முறை இந்தியா மோதியபோது, அந்த அணியின் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்கவில்லை. இறுதி ஆட்டத்தில் வென்ற இந்திய ஆடவர் அணியினர், பாகிஸ்தான் அமைச்சர் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.
Advertisement
Advertisement
மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த போட்டிக்கு டாஸ் சுண்டியபோது, பாகிஸ்தான் கேப்டனுடன் கைக்குலுக்குவதை இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் தவிர்த்தார். போட்டியின் முடிவிலும் இரு அணி வீராங்கனைகளும் கைக்குலுக்கவில்லை.
இந்த நிலையில், மகளிர் அணி வெற்றி குறித்து பாஜக சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “நீல நிற ஆடை அணிந்த பெண்கள், பெண்களின் சக்தியைக் காட்டியுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. தற்போதும் எப்போதும் இந்தியா வெற்றிபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian women's team beats Pakistan: ’Operation Sindoor continues’ -BJP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.