முகப்பு
கிரிக்கெட்

ஜெய்ஸ்வால், கில் சதம்: 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் குறித்து...

Updated On : 11 அக்டோபர் 2025, 1:22 pm IST
சதமடித்த மகிழ்ச்சியில் ஷுப்மன் கில். - படம்: ஏபி
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, ஷுப்மன் கில் 129* ரன்கள் எடுத்தார்கள்.

தில்லியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்நாளில் 318 ரன்கள் குவித்தது.

Advertisement

Advertisement

இரண்டாம் நாளில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 134.2ஆவது ஓவரில் துருவ் ஜுரெல் 44 ரன்களில் ஆட்டமிழந்ததும் டிக்ளேர் செய்வதாக கில் அறிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜோமெல் வாரிக்கேன் 3 விக்கெட்டுகள், ரஸ்டன் சேஸ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இந்தத் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

summary

India declared for 518 runs in the first innings of the second Test against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.