33 வயதிலேயே ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளதைப் பற்றி...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஃபினிஷருமான ஆசிஃப் அலி, அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
33 வயதான ஆசிஃப் அலி, பாகிஸ்தான் அணிக்காக 58 டி20 போட்டிகளிலும், 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கிடையாது.
இதில், 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 12 பந்துகளில் 24 ரன்கள் தேவையான நிலையில், 4 சிக்ஸர்கள் விளாசியதுடன் 7 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்திருந்தார்.
Advertisement
Advertisement
இவர், கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார். அதன்பின்னர், அணியில் தேர்வாகவில்லை.
நடுவரிசையில் விளையாடும் அதிரடி ஆட்டக்காரரான ஆசிஃப் அலி டி20 போட்டிகளில் 577 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 382 ரன்களும் குவித்துள்ளார்.
இதில், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
தனது ஓய்வு முடிவு குறித்து ஆசிஃப் அலி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒண்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பாகிஸ்தான் அணியின் சீருடையை அணிவது மிகப் பெரிய கௌரவம். மேலும், கிரிக்கெட் திடலில் என்னுடைய நாட்டுக்காக சேவையாற்றியது பெருமையான அத்தியாயமாகும்.
உலகக் கோப்பைத் தொடரில் எனது மகள் இறந்தபோது, ஒவ்வொரு மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் என்னை ஆதரித்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Pakistan’s Asif Ali retires from international cricket at 33
இதையும் படிக்க : ஜேமி ஓவர்டன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு! 2 போட்டிகளில் திடீர் முடிவு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.