முகப்பு
கிரிக்கெட்

5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!

இங்கிலாந்து - தெ.ஆ. உடனான இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்து...

Updated On : 5 செப்டம்பர், 2025 at 5:43 AM
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க வீரர்கள். - படம்: ஏபி
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தெ.ஆ. அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை வென்றுள்ளது.

முதலில் பேட்டிங் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்தது.

Advertisement

இதில் அதிகபட்சமாக பிரீட்ஸ்கி 85, ஸ்டப்ஸ் 58, மார்க்ரம் 49, பிரெவிஸ் 42 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 325/9 ரன்கள் எடுத்தது.

ஜோ ரூட், பெத்தேல், பட்லர் மூவரும் அரைசதம் அடித்தார்கள். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவையான நிலையில் 10 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

மேத்திவ் பிரீட்ஸ்கி ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் தெ.ஆ. அணி 2-0 என தொடரை வென்றது.

summary

South Africa clinched the ODI series against England with a game to spare after a five-run win in the second match that was set up by a record-breaking 85 by Matt Breetzke at Lord's.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments