யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத் துறை 7 மணி நேரம் விசாரணை!
அமலாக்கத் துறை விசாரணைக்கு யுவராஜ் சிங் ஆஜா்...
புது தில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(செப். 23) 7 மணி நேரத்துக்கும் விசாரணையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் யுவராஜ் சிங் அமலாக்கத் துறை விசாரணைக்கு இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.
அவருக்கு அமலாக்கத் துறையிடமிருந்து சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று(செப். 23) விசாரணைக்கு ஆஜரானார். பகல் 12 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவர் இரவு 8 மணிக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், யுவராஜ் சிங் தில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பினார். 1எக்ஸ் பெட் என்ற செயலி தொடா்பாக பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கு குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிவ்க்கப்பட்டது.
ED questions Yuvraj Singh for over 7 hours in betting app case
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.