மழையால் ஐபிஎல் ஆட்டம் 11 ஓவர்களாகக் குறைப்பு: ராஜஸ்தான் ரன் மழை!
11 ஓவர்கள் ஆட்டத்தில்(66 பந்துகளில்) 150 ரன்களைக் குவித்து ராஜஸ்தான் அசத்தல்
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்கியது. இரவு 10.10 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதனையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் அணி மும்பை அணி பந்துவீச்சை பதற்றமின்றி ஆடி, பந்துகளை அடிக்கடி பௌண்டரி எல்லைக் கோட்டுக்கு வெளியே பறக்கவிட்டனர். இதனால் அந்த அணியின் ரன்-ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அந்த அணியின் ஸ்ட்ரைக் ரேட் ஏறத்தாழ 227-க்கும் மேல்.
இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் அந்த அணி 150 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து 66 பந்துகளில் 151 ரன்கள் என்ற இமாலய இலக்கு மும்பை அணி வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
Advertisement
summary