முகப்பு
கிரிக்கெட்

மழையால் ஐபிஎல் ஆட்டம் 11 ஓவர்களாகக் குறைப்பு: ராஜஸ்தான் ரன் மழை!

11 ஓவர்கள் ஆட்டத்தில்(66 பந்துகளில்) 150 ரன்களைக் குவித்து ராஜஸ்தான் அசத்தல்

Updated On : 7 ஏப்ரல் 2026, 11:24 pm IST
ராஜஸ்தான் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் - AP
பகிர்:

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டம் மழையால் தாமதமாகத் தொடங்கியது. 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு இரவு 10.10 மணிக்கு குவாஹாட்டியில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் மும்பை அணி பந்துவீச்சை பதற்றமின்றி ஆடி, பந்துகளை அடிக்கடி பௌண்டரி எல்லைக் கோட்டுக்கு வெளியே பறக்கவிட்டனர். இதனால் அந்த அணியின் ரன்-ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அந்த அணியின் ஸ்ட்ரைக் ரேட் ஏறத்தாழ 227-க்கும் மேல்.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்களை இழந்து 150 ரன்களைக் குவித்தது.

Advertisement

Advertisement

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. அதில் 4 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகள் அடங்கும். அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 1 பௌண்டரியுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 278.5.

தொடர்ந்து, 66 பந்துகளில் 151 ரன்கள் என்ற இமாலய இலக்கு மும்பை அணி வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

summary

Rajasthan Royals vs Mumbai Indians, 13th Match

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.