ஆயுஷ் மாத்ரேவுக்கு தசைக்கிழிவு..! சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்பு!
சிஎஸ்கேவின் இளம் வீரருக்கு ஏற்பட்ட காயம் குறித்து...
சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு (18 வயது) இடது தொடையில் தசைக் கிழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் பல போட்டிகளில் விளையாடமால் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 194/9 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 184/8 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 12 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருக்கும்போது 2 ரன்கள் ஓடியபோது காயம் ஏற்பட்டது. பின்னர், பிசியோதெரபிஸ்ட் வந்து தற்காலிக சிகிச்சை அளித்த பிறகு. 1 ரன் ஓடவே மிகவும் சிரமப்பட்டார்.
Advertisement
அடுத்த பந்திலேயே ஆயுஷ் மாத்ரே ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு சிஎஸ்கே அணி மெதுவாக விளையாடி இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இது குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி கூறியிருப்பதாவது:
நிச்சயமாக தொடையின் தசையில் கிழிவு ஏற்பட்டுள்ளது. அது எவ்வளவு மோசமானது எனத் தெரியவில்லை. நாளைக்கு அல்லது அடுத்த நாள் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்படும். அவர் இல்லையென்றால் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்றார்.
இந்த சீசனில் ஆயுஷ் மாதேஎ 201 ரன்களை 177.87 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி இருக்கிறார். அவர் இல்லை என்றால் உர்வில் படேலுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமெனக் கூறப்படுகிறது.