டி20 உலகக் கோப்பையின் 25ஆவது போட்டியில் நேபாளம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற மே.இ.தீ. அணிக்கு 134 ரன்கள் தேவையாக இருக்கிறது.
மும்பை வாக்னடேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
நேபாளம் அணி பேட்டிங்கில் மிகவும் தடுமாற்றத்துடனே விளையாடியது.
இந்த அணியில் அதிகபட்சமாக தீபேந்திர சிங் ஐரி 58 ரன்கள் எடுத்து அசத்தினார்.
மே.இ.தீ. அணியின் சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.