முகப்பு
கிரிக்கெட்

முதல் டி20: இந்தியா பேட்டிங்! ஸ்ரேயாஸ், குல்தீப், பிஸ்னோய் ராணாவுக்கு இடமில்லை!

இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 போட்டி குறித்து...

Updated On : 21 ஜனவரி, 2026 at 3:03 PM
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன்கள்.
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்ஷித் ராணா, ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ் இல்லை என கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டெஸ்ட், ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்த இந்திய அணி டி20 தொடரிலாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கேப்டன் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் சொதப்பி வரும் நிலையில் இந்தத் தொடர் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் 7ஆம் தேதி டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.

இந்தியா (பிளேயிங் லெவன்): சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.

summary

First T20 against India New Zealand have won the toss and have opted to field.

முழு கட்டுரையைப் படிக்க →