முகப்பு
கிரிக்கெட்

சோஃபி டிவைன் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 154 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 153 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 22 ஜனவரி, 2026 at 4:26 PM
பகிர்:

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 153 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் வதோதராவில் இன்று (ஜனவரி 22) நடைபெற்று வரும் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

அரைசதம் விளாசிய சோஃபி டிவைன்

முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் அரைசதம் எடுத்தார். அவர் 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பெத் மூனி 38 ரன்களும், டேனி வியாட் ஹாட்ஜ் மற்றும் அனுஷ்கா சர்மா தலா 14 ரன்களும் எடுத்தனர்.

யுபி வாரியர்ஸ் தரப்பில் கிராந்தி கௌட் மற்றும் சோஃபி எக்கல்ஸ்டோன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். தீப்தி சர்மா மற்றும் சோல் டிரையான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி யுபி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது.

summary

In the Women's Premier League match against UP Warriorz, the Gujarat Giants team, batting first, scored 153 runs.

முழு கட்டுரையைப் படிக்க →