எஸ்ஏ20: வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் அணி!
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி குறித்து...
எஸ்ஏ20 கிரிக்கெட்டில் தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியை அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
எஸ்ஏ20 கிரிக்கெட்டில் அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ நியூயார்க் அணி 148/6 ரன்கள் எடுத்தது.
Advertisement
Advertisement
இந்த அணியில் அதிகபட்சமாக ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 70 ரன்கள் குவித்தார்.
அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.5 பந்தில் இலக்கை அடைந்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக ப்ரீட்ஸ்கி 66, டி காக் தலா 56 ரன்கள் எடுத்தார்கள். இந்தப் போட்டியில் ப்ரீட்ஸ்கி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
எஸ்ஏ20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2023 முதல் நடைபெற்று வருகின்றன. அனைத்து சீசனிலும் சன்ரைசர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
எஸ்ஏ20 கிரிக்கெட் வரலாற்றிலேயே பலம்வாய்ந்த அணியாக இந்த அணி மாறியிருக்கிறது.
2023 - சாம்பியன்
2024 - சாம்பியன்
2025 - ரன்னர் அப்.
2026 - இறுதிப்போட்டிக்குத் தகுதி.
The Sunrisers Eastern Cape team has created a record by advancing to the final for the fourth consecutive time in the SA20 cricket tournament.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.