அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்!
அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது அறிவித்துள்ளார்.
அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சர்ஃபராஸ் அகமது கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின், அவர் பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடவில்லை.
இந்த நிலையில், அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக சர்ஃபராஸ் அகமது தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழுவில் அண்மையில் உறுப்பினராக இணைந்த சர்ஃபராஸ் அகமது, டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
விக்கெட் கீப்பர் பேட்டரான சர்ஃபராஸ் அகமது பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 100-க்கும் அதிகமான போட்டிகளில் பாகிஸ்தான் அணியைக் கேப்டனாக அவர் வழிநடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக இரண்டு ஐசிசி கோப்பைகளை (யு19 உலகக் கோப்பை 2006 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி 2017) வென்று கொடுத்த ஒரே கேப்டன் சர்ஃபராஸ் அகமது என்பது குறிப்பிடத்தக்கது.