முகப்பு
கிரிக்கெட்

அணியை சிறப்பாக வழிநடத்தும் ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் பாராட்டு!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ரிஷப் பந்த் மிகவும் சிறப்பாக வழிநடத்துவதாக மிட்செல் மார்ஷ் பாராட்டியுள்ளார்.

Updated On : 28 மார்ச் 2026, 3:41 pm IST
ரிஷப் பந்த் - படம் | ஐபிஎல்
பகிர்:

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ரிஷப் பந்த் மிகவும் சிறப்பாக வழிநடத்துவதாக மிட்செல் மார்ஷ் பாராட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பிறகே, ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்று (மார்ச் 28) முதல் தொடங்குகிறது.

சின்னசாமி திடலில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.

Advertisement

ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ரிஷப் பந்த் கேப்டனாக சிறப்பாக வழிநடத்துவதாக மிட்செல் மார்ஷ் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணிக்கு என்னால் முடிந்த சிறப்பான பங்களிப்பை வழங்கி கேப்டன் ரிஷப் பந்த்துக்கு உதவ வேண்டும் என நினைக்கிறேன். இளம் வீரரான ரிஷப் பந்த் அணியை மிகவும் நன்றாக வழிநடத்துகிறார். அணி வீரர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைகளுக்கு அவர் எப்போதும் செவி சாய்க்கிறார். லக்னௌ அணியில் சிறந்த கேப்டன்கள் இருக்கின்றோம். அணிக்கு தேவையான இடத்தில் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சர்வதேச அணிகளின் கேப்டன்களான மிட்செல் மார்ஷ் மற்றும் அய்டன் மார்க்ரம் இருவரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Mitchell Marsh has heaped praise on Rishabh Pant's leadership, saying the skipper's openness to suggestions has been a key factor behind the positive environment within the Lucknow Super Giants camp.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.