ஐபிஎல்

ஆர்சிபி-க்கு எதிராகக் களமிறங்கும் ஹார்திக் பாண்டியா: மும்பை பந்துவீச்சு தேர்வு

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளுமே நடப்பு சீசன் இரண்டாம் பகுதியின் முதலிரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த அணிகள். இதனால், இரு அணிகளுக்குமே இது முக்கியமான ஆட்டம்.

இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியில் கடந்த இரண்டு ஆட்டங்களில் விளையாடாத ஹார்திக் பாண்டியா இம்முறை களமிறங்குகிறார்.

பெங்களூருவில் நவ்தீப் சைனி, வனிந்து ஹசரங்கா மற்றும் டிம் டேவிட் ஆகியோருக்குப் பதில் ஷபாஸ், டேன் கிறிஸ்டியன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

SCROLL FOR NEXT