ஐபிஎல்

ஐபிஎல் போட்டியிலிருந்து அர்ஜுன் டெண்டுல்கர் விலகல்: புதிய வீரரைத் தேர்வு செய்த மும்பை அணி

ஐபிஎல் போட்டியிலிருந்து அர்ஜுன் டெண்டுல்கர் விலகியதால் மற்றொரு வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. 

DIN

ஐபிஎல் போட்டியிலிருந்து அர்ஜுன் டெண்டுல்கர் விலகியதால் மற்றொரு வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. 

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றார். 21 வயது அர்ஜுன் விளையாடிய இரு ஆட்டங்களிலும் மும்பை அணிக்குத் தோல்வியே கிடைத்தன. ஹரியாணாவுக்கு எதிராக 1/34, புதுச்சேரிக்கு எதிராக 1/33 என சுமாராகவே பந்துவீசினார். பிறகு ஐபிஎல் ஏலப்பட்டியலில் அர்ஜுனின் பெயர் இடம்பெற்றது. இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன், இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகப் பணியாற்றியுள்ளார். இந்திய யு-19 அணிக்காகவும் விளையாடியுள்ளார். 

ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. எனினும் இதுவரை விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது அர்ஜுன் டெண்டுல்கருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தில்லி வேகப்பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங்கை மும்பை அணி தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக சிமர்ஜீத் சிங் இடம்பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

பொன்முடி சா்ச்சை பேச்சு வழக்கு: முழு விடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT