ஐபிஎல்

இந்த இலக்கை அடையும் 3-வது சிஎஸ்கே வீரர்: ஜடேஜாவின் புதிய சாதனை

DIN

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக 150-வது ஆட்டத்தில் விளையாடவுள்ளார் ஜடேஜா.

நவி மும்பையில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் அணிகள் நாளை விளையாடவுள்ளன. இந்த ஆட்டத்தில்தான் இந்த இலக்கை ஜடேஜா அடையவுள்ளார்.

2012 முதல் சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் ஜடேஜா, 150-வது ஆட்டத்தை விளையாடும் மூன்றாவது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையை அடைவார். இதற்கு முன்பு தோனி 217 ஆட்டங்களிலும் ரெய்னா 200 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்கள்.

சிஎஸ்கேவுக்காக 149 ஆட்டங்களில் 110 விக்கெட்டுகளும் 1523 ரன்களும் எடுத்துள்ளார் ஜடேஜா. கடந்த வருடம் ஆர்சிபி அணிக்கு எதிராக 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். ஹர்ஷல் படேல் ஓவரில் 36 ரன்கள் எடுத்துச் சாதனை செய்தார். 

இந்த வருடம் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதையடுத்து, சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT