கடந்த சீசனிலேயே சொல்லாமல் சொன்னாரா தோனி? விடியோ வைரல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதை கடந்த ஐபிஎல் சீசனில் கோப்பை வென்றபோதே தோனி கூறியதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதை கடந்த ஐபிஎல் சீசனில் கோப்பை வென்றபோதே தோனி கூறியதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார். புதன்கிழமை நடைபெற்ற அணிக் கூட்டத்தில் இதனை அறிவித்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தோனியும்.. பாகுபலியும்..: வாசிம் ஜாஃபர் ட்வீட் வைரல்
எனினும், கடந்த ஐபிஎல் கோப்பை வென்றபோதே தோனி இதனைக் கூறியதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலாகி வருகிறது.
கடந்த முறை கோப்பை வென்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அருகிலிருந்தவரிடம் 'பணி முடிந்தது' என தோனி கூறியிருக்கிறார். தோனி கூறுவதை மட்டும் தனியாக எடுத்து ரசிகர்கள் அதனை சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.