ஐபிஎல்

திரும்பவும் வருவோம் : பட்லர் நம்பிக்கை

DIN

ஐபிஎல் 2022 குவாலிஃபையர்-1 இல் ராஜஸ்தான் அணி குஜராத் அணியிடம் தோல்வியுற்றது. 

ஐபிஎல் 2022 இன் அதிக ரன்கள் (718 ரன்கள்) அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லர் தோல்விக் குறித்து கூறியதவாது: 

இதற்காகத்தான் நாங்கள் அட்டவனையில் முதலிரண்டு இடத்திற்குள் இடம் பிடித்தோம். எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் திரும்பவும் பலமான அணியாக வருவோம்.

எனக்கு ஆரம்பத்தில் ஆடுவதற்கு கடினமாக இருந்தது. சஞ்சு சாம்சன் அருமையாக விளையாடினார். இது என்னுடைய வழக்கமான ஆட்டம் கிடையாது. ஆனால் இறுதி வரை இருந்து என்னால் முடிந்ததை செய்தேன். சில நேரங்களில் விளையாடுவதற்கு கடினமாக இருக்கும். அப்போது அதிகமாக முயற்சித்து அவுட் ஆவதை விடப் பொறுமையாக இருப்பது நல்லது. எதிரணியினர் எனக்கு எப்படி பந்து வீச வேண்டுமென யோசித்து வைத்திருப்பர் என்பது தெரியும். அதனால் நான் பயப்படவில்லை. காத்திருந்து எனக்கான நேரத்தில் விளையாடினேன். 

அஸ்வின், சஹாலை நாங்கள் நம்புகிறோம். இந்த தொடர் முழுவதும் நன்றாக விளையாடியுள்ளனர். பவுலர்களுக்கு சிறிது கடினமான ஆடுகளம் தான். இன்னொரு வாய்ப்பு இருப்பதால் நாங்கள் திரும்பவும் வருவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT