ஐபிஎல்

சூர்யகுமார் யாதவை ஞாபகப்படுத்தும் ரியான் பராக்: உதவிப் பயிற்சியாளர்

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்கை பார்க்கும்போது இளம் சூர்யகுமார் யாதவ் நினைவுக்கு வருவதாக அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்கை பார்க்கும்போது இளம் சூர்யகுமார் யாதவ் நினைவுக்கு வருவதாக அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரியான் பராக் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவை எனக்கு நினைவுபடுத்துகிறார். ரியான் பராக்கின் ஆட்டம் சூர்யகுமார் யாதவைப் போன்று உள்ளது. அவரிடம் பல திறமைகள் உள்ளன. அவர் இளம் வீரர் (22 வயது) என்றபோதிலும், மூத்த வீரருக்கு உள்ள பக்குவம் அவருக்கு இருக்கிறது என்றார்.

நேற்றையப் போட்டியில் ரியான் பராக் 39 பந்துகளில் 54 ரன்கள் (5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை பயிா் சாகுபடி திட்டம்: வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் சிறந்த செவிலியா்களுக்கு விருது

பெற்றோா் பெருமைப்படும் வகையில் மாணவா்கள் திகழ வேண்டும்

மே 26-இல் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்: மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT