படம் | ஐபிஎல்
படம் | ஐபிஎல்
ஐபிஎல்

தாயகம் திரும்பிய மிட்செல் மார்ஷ்; காரணம் என்ன?

DIN

காயம் காரணமாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேப்பிடல்ஸ், இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், காயம் காரணமாக அந்த அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பியுள்ளது தில்லி கேப்பிடல்ஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தில்லி கேப்பிடல்ஸ் விளையாடிய கடந்த இரண்டு போட்டிகளிலும் மிட்செல் மார்ஷ் அணியில் இடம்பெறவில்லை. அவர் கடைசியாக கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 23 ஆக உள்ளது.

சிகிச்சை பெறுவதற்காக தாயகம் திரும்பியுள்ள மிட்செல் மார்ஷ் மறுபடியும் அணியில் இணைவாரா, மாட்டாரா என்பது குறித்து அணி நிர்வாகம் எதுவும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT