FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

ஷிவம் துபேவுக்கு பந்துவீச அஞ்சும் எதிரணிகள்: சிஎஸ்கே பயிற்சியாளர்

ஷிவம் துபேவுக்கு பந்துவீச எதிரணிகள் அஞ்சுவதாக சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 ஏப்ரல் 2024, 6:03 pm IST
ஷிவம் துபே - படம் | ஐபிஎல்
பகிர்:

ஷிவம் துபேவுக்கு பந்துவீச எதிரணிகள் அஞ்சுவதாக சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அசத்தியது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் 7 பேரை பந்துவீச்சில் ஈடுபடுத்தியபோதும், ஷிவம் துபே களமிறங்கிய பிறகு அவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஷிவம் துபே ஆட்டத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறன் கொண்டவர் எனவும், அவருக்கு எதிராக எதிரணிகள் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதற்கு அஞ்சுவதாகவும் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினர். ஆனால், 8-வது ஓவருக்குப் பிறகு அவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவில்லை. சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் ஓவரில் ஷிவம் துபே ஒரேயொரு பந்தினை மட்டுமே எதிர்கொண்டார். ஷிவம் துபே களமிறங்கிய பிறகு மும்பை இந்தியன்ஸ் வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். சுழற்பந்துவீச்சாளர்களை திறம்பட எதிர்கொண்டு விளையாடுவதால் துபே எளிதில் ஆட்டத்தை அவரது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து வருகிறார். அதனால் எதிரணியினர் அவர் களத்தில் இருக்கும் வரை சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த அஞ்சுகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments