மும்பை அணியின் புதிய கேப்டன் ஹார்திக் பாண்டியா போட்டி தொடங்குவற்கு முன்பு பேசிய விடியோவை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஹார்திக் பாண்டியா பேசும் விடியோவினை மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அந்த விடியோவில் ஹார்திக் பாண்டியா பேசியதாவது: மும்பை வீரர்கள் இந்த ஐபிஎல் தொடருக்காக சிறப்பாக தயாராகியிருக்கிறார்கள். அவர்கள் நிறைய கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பயிற்சி ஒருவர் மற்றொருவரைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. அதில் சில அருமையான நினைவுகளை நாங்கள் உருவாக்கினோம். இது நீண்ட தொடர். அதற்கு ஏற்றவாறு எங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளோம். அதே நேரத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்து மிகுந்த உற்சாகத்தில் உள்ளேன் என்றார்.