ஆட்ட நாயகன் விருதில் சாதனை படைத்த ஹார்திக் பாண்டியா!
ஹார்திக் பாண்டியா நிகழ்த்திய சாதனை குறித்து...
இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
பேட்டிங்கில் 23 பந்துகளில் அரைசதம் அடித்த பாண்டியா பந்துவீச்சில் 3 ஓவர்களுக்கு 21 ரன்கள் மட்டுமே வழங்கினார்.
ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்துவீசியது. இந்திய அணி 256/4 ரன்கள் குவிக்க, ஜிம்பாப்வே அணி 184/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் பேட்டிங்க், பந்துவீச்சு என அசத்திய ஹார்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
இந்த உலகக் கோப்பையில் ஹார்திக் பாண்டியாவுக்கு இது இரண்டாவது ஆட்ட நாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நமீபியாவுக்கு எதிராகவும் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார்.
இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்ற முதல் இந்தியராக சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணி அடுத்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் உடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
Hardik Pandya is the first Indian to win 2 POTM awards in T20 World Cup 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.