தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட் செய்கிறது.
கடந்த போட்டியில் அணியில் விளையாடாத தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். குல்பதீன் நயீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றையப் போட்டியில் டேவிட் வார்னர் விளையாடவில்லை.