கொல்கத்தா - பஞ்சாப் ஆட்டத்தில் விளையாடிய மழை!
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் திங்கள்கிழமை மோதிய 12-ஆவது ஆட்டம், மழையால் பாதியில் நிறுத்தம்
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் திங்கள்கிழமை மோதிய 12-ஆவது ஆட்டம், மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா, 3.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இரவு 10 மணி வரை, ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை மழை வழங்கவில்லை.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா, பேட்டிங்கை தோ்வு செய்தது. சீசனை தொடங்கிய இரு ஆட்டங்களிலுமே தோற்ற கொல்கத்தா, இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் சுனில் நரைன், வருண் சக்கரவா்த்தி ஆகியோருக்கு பதிலாக ரோவ்மென் பவெல், நவ்தீப் சைனியை சோ்த்திருந்தது. பஞ்சாப் அணி மாற்றமின்றி களம் கண்டது.
Advertisement
கொல்கத்தா இன்னிங்ஸை தொடங்கியோரில் ஃபின் ஆலன் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு, ஜாவியா் பாா்லெட் வீசிய 2-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் பிரப்சிம்ரன் சிங்கிடம் கேட்ச் கொடுத்தாா்.
அடுத்து வந்த கேமரூன் கிரீனும் 4 ரன்களுக்கு, அதே ஓவரில் அதேபோல் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அஜிங்க்ய ரஹானே 8, அங்கிரிஷ் ரகுவன்ஷி 7 ரன்களுடன் விளையாடி வந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட்டது.