ஐபிஎல்-2019

ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா?

எழில்

ஐபிஎல் போட்டியைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப வாய்ப்புண்டா என்கிற கேள்விக்கு சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

ஐபிஎல் போட்டியை வெற்றி திரையரங்கில் ஒளிபரப்ப முடியுமா எனப் பலரும் கேட்டுள்ளீர்கள். இதற்கான பதில் - முடியாது. 

சட்டத்தின்படி, தணிக்கை பெற்ற படங்கள், காட்சிகளை மட்டுமே திரையரங்குகளில் திரையிட முடியும். நேரலை ஐபிஎல் ஆட்டங்களைத் தணிக்கை செய்யமுடியாது!

இந்த விதிமுறை மாற்றப்பட்டால், வருங்காலத்தில் திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்ப முடியும் என்று கூறியுள்ளார். 

கடந்த வருடம், திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக தமிழ்த் திரையுலகம் வேலை நிறுத்தம் செய்தது. இதனால் சிறிது காலம் புதிய படங்கள் வெளிவரவில்லை. இதையடுத்து திரையரங்குகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்தது. இதனால் உண்டான நஷ்டத்தை ஈடுகட்ட ஐபிஎல் ஆட்டங்களைத் தங்களது திரையரங்குகளில் ஒளிபரப்ப சென்னையைச் சேர்ந்த சில திரையரங்குகள் முன்வந்தன. ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்தன. எனினும் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT