ஐபிஎல்-2019

ஐபிஎல் போட்டியில் விளையாட லசித் மலிங்காவுக்கு அனுமதி!

எழில்

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் லசித் மலிங்கா விளையாடுவதில் உண்டான சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அவர் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாக அனைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்களும் உள்ளூர் ஒருநாள் போட்டி ஒன்றில் கலந்துகொள்ளவேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்வதில் லசித் மலிங்காவுக்குச் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் இப்பிரச்னையில் பிசிசிஐ தலையிட்டது. ஐபிஎல் போட்டியில் முழுவதுமாகக் கலந்துகொள்வதாக இருந்ததால்தான் மலிங்காவின் பெயர் ஏலத்தில் தேர்வானது. அதில் அவரை ஓர் அணி தேர்வு செய்துள்ள நிலையில் திடீரென போட்டியில் கலந்துகொள்ள முடியாது என்கிற நிலை உருவானால் இது ஐபிஎல் போட்டிக்கும் குறிப்பிட்ட அணிக்கும் சிக்கல் ஏற்படும் என்று பிசிசிஐ சார்பில் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள மலிங்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டியை விடவும் ஐபிஎல் போட்டியில் இன்னும் கடினமான எதிரணிகளுடன் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதிவரை ஐபிஎல் போட்டியில் மலிங்கா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் இலங்கையில் ஏப்ரல் 4 முதல் 11 வரை நடைபெறவுள்ள உள்ளூர் ஒருநாள் போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் மலிங்கா. இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அனுமதி கோருவேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT