ஐபிஎல்-2020

யாரும் தோற்க விரும்புவதில்லை: தோனி மனைவி சாக்‌ஷி உருக்கம்

DIN

ஐபிஎல்-லில் பிளேஆஃப் போட்டியிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறியதையடுத்து ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாகப் பதிவு ஒன்றை எழுதியுள்ளார் தோனியின் மனைவி சாக்‌ஷி.

துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய சிஎஸ்கே அணி, 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றாலும் ராஜஸ்தானின் வெற்றியால் ஐபிஎல் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாகப் பதிவு ஒன்றை எழுதியுள்ளார் தோனியின் மனைவி சாக்‌ஷி. அதில் அவர் கூறியதாவது:

இது ஓர் விளையாட்டு தான். ஒரு நாள் நீங்கள் வெல்வீர்கள், இன்னொரு நாள் தோற்பீர்கள். பல வருடங்களாக மகத்தான வெற்றிகளும் சில வேதனையான தோல்விகளும் சாட்சிகளாக உள்ளன. ஒன்றைக் கொண்டாடுகிறோம், இன்னொன்றால் மனம் உடைந்து போகிறோம். 

சிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோற்கிறார்கள், மற்றவர்கள் தவறவிடுகிறார்கள், இது ஒரு விளையாட்டு. விளையாட்டுத்தன்மையின் மகத்துவத்தை இழக்காமல் உணர்ச்சிவசப்படுங்கள். இது ஒரு விளையாட்டு தான். 

யாரும் தோற்க விரும்புவதில்லை. அனைவராலும் வெற்றியாளர்களாக முடியாது. உண்மையான போராளிகள் போராடப் பிறக்கிறார்கள். நம் மனத்தில் அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT