ஒலிம்பிக்ஸ்:  மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி தோல்வி 
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ்:  மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி தோல்வி

இன்று காலை நடைபெற்ற மகளிர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

ANI


டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் 15 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், இந்தியாவின் அன்னு ராணி 14வது இடத்தைப் பிடித்தார்.

அவர் தனது முதல் வாய்ப்பில் 50.35 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்தார். இரண்டாவது வாய்ப்பில் 53.19 மீட்டர் தூரமும், மூன்றாவது வாய்ப்பில் 54.04 மீட்டர் தூரமும் ஈட்டியை எறிந்தார். 

இந்த போட்டியில் முதல் 12 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.  போலந்து வீராங்கனை முதல் வாய்ப்பிலேயே 65.24 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT