டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர்கள் ரவிக்குமார், தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
57 கிலோ எடைப் பிரிவு: டோக்கியோ ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
57 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி போட்டியில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை எதிர்கொண்ட இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா 14-4 என்ற கணக்கில் வான்க்ளோவை வீழ்த்தினார்.
இதையடுத்து இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
86 கிலோ எடைப் பிரிவு: டோக்கியோ ஆடவர் மல்யுத்தம் 86 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி போட்டியில் சீனா வீரர் லின் சூசனை எதிர்கொண்ட இந்திய வீரர் தீபக் புனியா 6-3 என்ற கணக்கில் லின் சூசனை வீழ்த்தினார்.
இதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் தீபக் புனியா.
அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் டேவிட் மோரீஸை எதிர்கொள்கிறார்.