ஒலிம்பிக்ஸ்

மல்யுத்தம்: அரை இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்கள்!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர்கள் ரவிக்குமார், தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

DIN


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர்கள் ரவிக்குமார், தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

57 கிலோ எடைப் பிரிவு: டோக்கியோ ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

57 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி போட்டியில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை எதிர்கொண்ட இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா 14-4 என்ற கணக்கில் வான்க்ளோவை  வீழ்த்தினார். 

இதையடுத்து இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

86 கிலோ எடைப் பிரிவு: டோக்கியோ ஆடவர் மல்யுத்தம் 86 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதிக்கு  முன்னேறியுள்ளார். 

மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி போட்டியில் சீனா வீரர் லின் சூசனை எதிர்கொண்ட இந்திய வீரர் தீபக் புனியா 6-3 என்ற கணக்கில் லின் சூசனை வீழ்த்தினார்.

இதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் தீபக் புனியா. 

அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் டேவிட் மோரீஸை எதிர்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிப்பு

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 போ் கைது

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்

காலை உணவு திட்டத்தால் மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அதிகரிப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

ஒசூரில் கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க பொதுசுகாதாரக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT