ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.31 லட்சம் பரிசு: மத்திய பிரதேச அரசு

DIN

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.31 லட்சம் வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி முதன்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தது. அதில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடியது. அதில் தோல்வியடைந்த இந்திய அணி 4-ம் இடத்தைப் பிடித்தது. 

பதக்கம் வெல்லாதபோதும் வீராங்கனைகள் ஒவ்வொரும் தங்கம் என அவர்களது சாதனைகளை நாடே கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.31 லட்சம் வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

நமது மகளிர் ஹாக்கி அணியினர் ஒலிம்பிக்கில் தோற்றிருந்தாலும் நாட்டு மக்களின் இதயத்தை வென்றுவிட்டனர் என்று அம்மாநில முதுல்வர் சிவராஜ் சிங் சௌகான் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கும் அவர் வாழ்த்து கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT